Friday, May 4, 2012

நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்துவிட்டு... தேமுதிகவுக்கு பிடிக்காத எம்.ஜி.ஆர். பாடல்! சட்டசபையில் ஜெ.!


சட்டசபையில் இன்று (04.05.2012) கேள்வி நேரத்தின்போது அருண் சுப்பிரமணியன் (தே.மு.தி.க.) எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்ற என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற பாடலை குறிப்பிட்டு திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கிரானைட் கற்கள் கிடைக்கிறது. எனவே அங்கு ஏற்றுமதி மையம் அமைக்கப்படுமா? என்று கேட்டார்.

அப்போது குறுக்கிட்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எம்.ஜி.ஆர். பாடலில் ஒரு சில பாடல்கள் தான் பிடிக்கும். எல்லா பாடல்களும் பிடிக்காது. நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்துவிட்டு நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டான் என்ற பாடல் பிடிக்காதது ஏன்? என்பது புரியாத புதிராக உள்ளது. அதை அவர்கள் தான் விளக்க வேண்டும் என்றார்.


அப்போது தே.மு.தி.க.வினர் எழுந்ததால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்தினார்.

1 comment:

  1. USB Diskய் பாதுக்கப்போம்!

    http://mytamilpeople.blogspot.in/2011/09/usb-disk-security-free-download.html

    ReplyDelete