Friday, May 25, 2012

விஷ்ணுவின் ப்ளான்! அஜீத்துக்கும் அதுவே விருப்பம்!



அஜீத் நடித்துள்ள பில்லா-2  ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஜூன் மாதம் 15-ம் தேதி பில்லா-2 ரிலீஸாகிறது. இந்த வருடம் அஜீத் 3 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் பில்லா-2 ஷூட்டிங் முடிந்த சில நாட்களிலேயே அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்திற்கு தயாராகிவிட்டார் அஜித்.

மே 30-ம் தேதி முதல் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி என முன்னணி நட்சத்திரங்கள் இதில் இணைகிறார்கள். மேலும் சிறப்பு அம்சமாக தெலுங்கு நடிகர்களை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்கப் போகிறாராம் இயக்குனர்.

கௌரவ வேடத்தில் நடிக்க தெலுங்கு திரைஉலகின் முன்னனி நடிகர்களான நாகார்ஜுனா, ரவி தேஜா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அஜீத்தின் மங்காத்தா படம் தெலுங்கிலும் வெளியாகி பிரபலமானது. இந்தப் படத்தையும் தெலுங்கில் வெளியிட ப்ளான் இருக்கிறதாம். அதனால் தான் தெலுங்கு நடிகரை நடிக்க வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடிக்க ஆசைப்படுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

அஜீத்தும் அதையே தான் விரும்புகிறாராம்.அரவிந்த் சாமி, பிருத்திவிராஜ் ஆகியோரிடமும் கால்ஷீட் கேட்டதாகத் தெரிகிறது. அரவிந்த்சாமி மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் நடித்துக்
கொண்டிருப்பதால், அந்த படம் முடிந்த பிறகு விஷ்ணுவர்தன் படத்திற்கு கால்ஷீட் தருவதாக கூறியுள்ளாராம்.

இந்த படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை. பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா-2 என தொடர்ந்து அஜீத் நடித்த படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்.. பல லாட்ஜுகளில் உல்லாசம்!

 Two Youths Arrested Vellore Cheating Girls Via Facebook

பேஸ்புக் மூலம் இரு பெண்களுடன் பழகி அவர்களை பலமுறை லாட்ஜுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உல்லாச நிலையில் இருந்ததை படம் எடுத்து வைத்து மிரட்டியே பலமுறை அந்தப் பெண்களை இந்த வாலிபர்கள் அனுபவித்துள்ளனர்.

வேலூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி. முருகேசனிடம் சென்னை திருவல்லிக்கேணி உலகப்பன் தெருவை சேர்ந்த சுஜித்ரா என்ற பெண் கொடுத்த புகாரில்,

நான் கடந்த 7 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். அங்கு வேலை செய்யும் காயத்ரி தேவிக்கு பேஸ்புக் மூலம் சதீஷ் ஜெயராம் என்பவர் பழக்கமானார். அதைத் தொடர்ந்து சதீஷ் மற்றும் அவரது நண்பர் ஆனந்த்பாபு ஆகியோர் காயத்ரி மூலம் எனக்கு பழக்கமானார்கள்.

கடந்த ஜனவரி மாதம் சதீசும், ஆனந்த்பாபு சென்னை வந்து எங்களை வேலூரில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்துச் சென்றனர். ஆனால் கோவிலுக்கு போகவில்லை. வேலூரில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர். அங்கு காயத்ரி, சதீஷ் ஒரு அறையிலும் நானும் ஆனந்தும் ஒரு அறையிலும் தங்கினோம்.

அப்போது ஆனந்த் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி சத்தியம் செய்து என்னுடன் உல்லாசமாக இருந்தார். மறுநாள் நாங்கள் சென்னை வந்து விட்டோம்.

அதைத்தொடர்ந்து நாங்கள் தொலைபேசியில் பேசி வந்தோம். பிப்ரவரி மாதம் சதீஷ் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு ஆனந்தும் நானும் ஹோட்டலுக்கு வந்து விடுகிறோம். நீயும், காயத்திரியும் வந்துவிடுங்கள் என்றார்.

நாங்களும் சென்று அங்கு அவர்களுடன் 2 நாட்கள் உல்லாசமாக இருந்தோம். அதைத்தொடர்ந்து சில நாட்கள் ஆனந்த்பாபு தொலைபேசியில் பேசுவதை நிறுத்தினார். மார்ச் மாதம் மீண்டும் ஹோட்டலுக்கு வருமாறு கூறினார். நான் வர மறுத்து விட்டேன்.

அப்போது ஆனந்த்பாபு நாம் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து பதிவு செய்து உள்ளேன். நீ சம்மதிக்கவில்லை என்றால் இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். அதனால் நான் பயந்து போய் மீண்டும் ஹோட்டலுக்கு சென்று ஆனந்த்பாபுவுடன் உல்லாசமாக இருந்தேன்.
இந்நிலையில் காயத்ரி தேவியை சதீஷ் ஏமாற்றி விட்டதாகவும், மேலும் அவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து பல குற்றங்களில் ஈடுபடுவதாகவும் எனனை போல பலரை இப்படி ஏமாற்றியதும் தெரியவந்தது. எனவே ஆனந்த்பாபு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சதீஷ், திலீப், லூயிஸ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

அவருடன் காயத்ரி தேவியும் எஸ்.பி. அலுவலத்துக்கு வந்து புகார் தந்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். போலீசார் கூறிய யோசனையின்படி மீண்டும் சுஜித்ராவும், காயத்ரி தேவியும் ஆனந்த்பாபு மற்றும் சதீஷிடம் பேசினர்.

அவர்களை ராணிப்பேட்டை விடுதி ஒன்றிற்கு வருமாறு அழைத்தனர். அதை நம்பி நேற்றிரவு 9 மணி அளவில் இருவரும் நிரோத் சகிதமாக அங்கு வந்தனர். இருவரையும் போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

இவர்கள் இன்னும் எத்தனைப் பெண்களை ஏமாற்றியுள்ளனரோ தெரியவில்லை. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவர்களது மேலும் பல நண்பர்களுக்கும் பேஸ்புக் மோசடிகளில் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால், அவர்களையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, May 24, 2012

தேய்ந்து வளரும் நிலா


 சந்திரன் வளர்ந்து தேய்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் தகவலளித்துள்ளனர். சந்திரன் ஒரு இயற்கையான செயற்கைகோள் என்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளிமையத்தில் உள்ள எல்.ஆர்.ஓ. என்ற கேமரா துல்லியமாக படம் பிடித்து அடையாளம் காட்டியுள்ளது. முன்னதாக அப்பல்லோ- 15, 16 மற்றும் 17 விண்வெளி பயணங்கள் மூலம் சந்திரனில் செங்குத்தான பாறைகள் மற்றம் நிலப்பரப்பு உள்ளது தெரிய வந்தது. அவை 10 மீட்டர் உயரமும், பல கிலோ மீட்டர் நீளமும் கொண்டவையாக உள்ளன என்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில, சந்திரன் மிகவும் குளிர்ச்சியானது. அவற்றின் பாறைகள் சுருங்கி விரிவடையும் தன்மை உடையது இதுபோன்ற பல தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, சந்திரன் வளர்ந்து மீண்டும் தேயக்கூடிய தன்மை வாய்ந்தது. எனவே, இது ஒரு செயல்படக்கூடிய கிரகம் தான் என நாசா விண்வெளி மையத்தின் சந்திரன் ஆய்வு குழு தெரிவித்தது. சந்திரன் பல அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அழகிரி கை ஓங்குகிறது


தி.மு.க.,வில் மத்திய அமைச்சர் அழகிரியின் கை ஓங்கும் வகையில், அவரின் ஆதரவாளர்கள் 16 பேர் மீது எடுக்க இருந்த ஒழுங்கு நடவடிக்கை முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 15ம் தேதி, மதுரையில் நடந்த இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை, மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர், வரவேற்காததால், அழகிரி ஆதரவாளர்கள் 17 பேருக்கு, தி.மு.க., மேலிடம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.அதற்கு, 17 பேரும் பதில் அனுப்பி இருந்தனர். சபைத் தலைவர் இசக்கிமுத்து அனுப்பிய பதில், கட்சித் தலைமைக்கு அதிருப்தியை அளித்தது. அதனால் அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மற்ற 16 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

விசாரணை :அழகிரி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என, ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரை திருப்திப்படுத்தும் வகையில், 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதே சமயம் அவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினால், அழகிரி அதிருப்தி அடைவார் என்பதால், சபைத் தலைவர் இசக்கிமுத்து மட்டும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மற்ற 16 பேரின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, விசாரணை என்ற பெயரில் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.கடந்த சில நாட்களுக்கு முன், ஸ்டாலின் வெளிநாடு சென்றிருந்தார். இந்த தருணத்தில், ஒழுங்கு நடவடிக்கை முடிவை ரத்து செய்ய வேண்டும் என, அழகிரியிடம், அவரின் ஆதரவாளர்கள் 16 பேரும் கோரிக்கை விடுத்தனர்.

அழகிரி வலியுறுத்தல்:இதையடுத்து, நேற்று முன்தினம் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியை, அழகிரி சந்தித்துப் பேசியதாகவும், அப்போது தன் ஆதரவாளர்களின் ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என, அவர் வலியுறுத்தியதாகவும், கூறப்படுகிறது.அழகிரியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், 16 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலின் கிளப்பிய விவகாரம், அவர் இல்லாத நேரத்தில் சுபமாக முடிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் அதிர்ச்சி - அதிருப்தி


புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி நடக்கிறது. இங்கு அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் நேரடியாக போட்டியிடுகிறது. இதர கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன.

இந்த நிலையில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ஸ்ரீதர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ரஜினி ரசிகர்களை திரட்டி ரஜினி மன்ற பெயரிட்ட பேனர், மற்றும் கொடியுடன் ஊர்வலமாக சென்று மனுவை தாக்கல் செய்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரஜினி அதிர்ச்சியடைந்துள்ளார். ரஜினி ரசிகர்கள் மன்றம் பெயரில் புதுக்கோட்டையில் போட்டியிட ஸ்ரீதர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதை ரஜினி ஏற்கவில்லை. வேட்பு மனுவை வாபஸ் பெறும்படி உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மனுவை அவர் வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுதாகர்,  ’’ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஸ்ரீதர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தகவலை பத்திரிகை மூலம் அறிந்தோம். நான் அவரிடம் ரஜினி பெயரையோ ரசிகர் மன்றத்தின் பெயரையோ மன்ற கொடியையோ பயன்படுத்தி தேர்தலில் நிற்ககூடாது என்று கூறி இருக்கிறேன்.

ரஜினி மன்ற உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நீற்கலாம். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வேலையும் செய்யலாம்.

ஆனால் அவர்கள் ரஜினி பெயரையோ, மன்ற கொடியையோ பயன்படுத்தக்கூடாது. ரசிகர்கள் அவர்களின் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்பதில்தான் ரஜினி அக்கறையுடன் இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில்,   தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீதர்,  ‘’வேட்பு மனு தாக்கல் செய்தது நான் எடுத்த முடிவு அல்ல மாவட் டத்தில் உள்ள அனைத்து ரஜினி ரசிகர்களும் கூடி எடுத்த முடிவு’’ என்கிறார்.

Wednesday, May 23, 2012

புலிகளின் முன்னாள் அரசியல் கட்சியில் சிக்கல்! வைகோவுடன் அவசர ஆலோசனை!!


இலங்கையில் விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியாக முன்பு செயல்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தனி ஈழம் வேண்டாம் என்று கூறியுள்ள கருத்து, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ.வுடன் அவசர ஆலோசனை நடத்துவதற்காக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் தமிழகம் வந்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சமீபத்தில் இலங்கையின் சிங்கக் கொடியை அசைத்ததும், ஈழம் வேண்டவே வேண்டாம் என்று அடித்துக் கூறியதும், அக் கட்சியின் சில எம்.பி.க்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இரா.சம்பந்தனை கட்சித் தலைமையில் இருந்து அகற்றி புதிய தலைவர் ஒருவரை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.


ஸ்ரீதரன் எம்.பி. இன்று வைகோவை சந்தித்தபோது..

அது தொடர்பாக வைகோவின் ஆதரவை பெறுவதற்கே, ஸ்ரீதரன் எம்.பி. அவசர விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று தெரியவருகிறது.

சம்பந்தருக்கு எதிரான அணி ஒன்று (ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் உள்ளன) ‘ஊடகப் போராளி’ சரவணபவன் என்பவரை தலைவராக முன்னிறுத்தும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவரது தலைமைக்கு ஆதரவு கோரியே வைகோவை சந்தித்துள்ளார் ஸ்ரீதரன் எம்.பி. என்று கூறப்படுகிறது.

சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்ட எம்.பி.-யாக உள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் உரிமையாளர் இவர்தான் என்பதால், ஊடகப் போராளி என அழைக்கப்படுகிறார்.

வைகோவின் ஆதரவு கிட்டினால், ஊடகப் போராளி சரவணபவனுக்கு, நெடுமாறன், சீமான் ஆகியோரின் ஆதரவையும் திரட்ட முடியும் என அவரது குழு நம்புகிறது என்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சிக்கல் உள்ளதாக தெரியவருகிறது. சமீபத்தில் லண்டனில் பேட்டியளித்த சரவணபவன், தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரன் அல்ல, இரா.சம்பந்தன்தான் என்று தெரிவித்திருந்தார்.

அந்தக் கருத்தை அவர் வாபஸ் பெற்றால்தான், அவருக்கு ஆதரவு தரமுடியும் என்று இன உணர்வு அமைப்புகள் கூறுகின்றன.

இரா.சம்பந்தனால் கட்சிக்குள் அழைத்து வரப்பட்டவரும், சம்பந்தனின் நெருங்கிய உறவினருமான சரவணபவன் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக அவர் வேறு ஒரு செயல்திட்டம் வகுத்துள்ளார் என்கிறார்கள்.

சம்பந்தனை கௌரவ தலைவராகவும், தம்மை செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே ஊடகப் போராளியின் நிலைப்பாடு.

இந்த நிலையில், சரவணபவனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீதரன் எம்.பி. இன்று வைகோவை சந்தித்த அவர், தொடர்ந்தும் சில தினங்கள் தமிழகத்தில் தங்கியிருந்து, மற்றைய கட்சித் தலைவர்களையும் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் விசிட்: டில்லி மீடியாவில் இப்போதே பரபரப்பு


முதல்வர் ஜெயலலிதா, டில்லியில் ஒரு வைல்ட்-கேம் ஒன்றுக்கு தயாராகிறார். அதற்காக ஜூன் 4-ந் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலை வைத்து இந்த விளையாட்டை அவர் விளையாடிப் பார்க்கப் போகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரஸும், பிரதான எதிர்க் கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் இன்னமும் தமது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அவர்களை முந்திக் கொண்டு, காங்கிரஸுக்கு எதிரான வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் சங்மாவுக்கு முதல்வர் ஜெயலலிதாவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் லாபி செய்யத் துவங்கியுள்ளனர்.

ஜெயலலிதாவின் இந்த அதிரடி விளையாட்டு, டில்லி அரசியலில் நிச்சயமாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதான கட்சிகள் இரண்டுமே வேட்பாளர் யார் என்று அறிவிக்காத நிலையில், டில்லி மீடியாக்கள் ஜெயலலிதாவின் முயற்சிக்கு எதிர்பாராத விளம்பரத்தை கொடுக்கின்றன. டில்லி அரசியலில், ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தில் ஜெயலலிதாவின் பெயர் நன்றாகவே அடிபடுகிறது.

இப்படியான நிலையில்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜூன் 4-ந் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். அவரது பயணம், ஜனாதிபதி தேர்தல் தொடர்பானதல்ல. திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவை சந்தித்து தமிழக திட்டங்களுக்கான நிதி ஒதுக்டு தொடர்பாகப் பேசவே முதல்வர் டில்லி செல்கிறார்.

ஆனால், டில்லியில் இருக்கும்போது, ஜெயலலிதா ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடையே லாபியில் ஈடுபடுவார் என டில்லி மீடியாக்கள் செய்தி வெளியிடுகின்றன. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சங்மாவை முன்னிறுத்துமாறு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஜெயலலிதா வலியுறுத்துவார் என்று ஊகிக்கப்படுகிறது.

வழமையாக ஜெயலலிதாவின் டில்லிப் பயணங்களுக்கு மாநில அளவிலேயே டில்லி மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். மாநில விவகாரங்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமோ, அதைவிட அதிகமாக யாரும் கண்டுகொள்வதில்லை. அதாவது, ஜெயலலிதாவின் டில்லி விசிட்டுகள், செகன்டரி நியூஸ் என்ற கட்டகரிக்கு வெளியே வந்ததில்லை.

ஆனால் இம்முறை, ஜெயலலிதாவின் டெல்லி விசிட்டுக்கு, தேசிய அரசியலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கிடைக்கவுள்ளது. இந்த விளையாட்டை முதல்வர் சரியாக விளையாடினால், தேசிய அரசியலில் அவரது முக்கியத்துவம் உயரும். என்றாவது ஒரு நாள் பிரதமராகும் அவரது கனவுக்கும், இது உதவும்.