Tuesday, May 22, 2012

2ஜி ஸ்பெக்ட்ரம், சத்யத்தை அடுத்து ரீபோக் இந்தியாவில் 8,700 கோடி ரூபாய் ஊழல்


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தை மட்டுமல்லாது நாட்டையே கலக்கிய சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடர்ந்து தனியார் நிறுவனமான ரீபோக் ஷூ நிறுவனத்தில் அதிகாரிகள் இரண்டு பேர் ஊழல் செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஷூ நிறுவனம்: வெளிநாட்டு நிறுவனத்தை சேர்ந்த ஷூ நிறுவனம் ஒன்று இந்தியாவில் ரீபோக் என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் வகை ஷூக்களை தயாரித்து ஆண்டு ஒன்றிற்கு சுமார் 600 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கூர்கான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்து ஷூக்களை உற்பத்திசெய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக மேலாண் இயக்குனராக பணி புரிந்து வந்‌தவர்‌ சுபீந்தர் சிங் பிரேம் . மற்றும் தலைமை செயல் இயக்குனராக இருந்தவர் விஷ்ணுபகவத். இவர்கள் இருவரும் இணைந்து ரகசிய கு‌டோன்களை உருவாக்கி நிறுவனத்திற்கு எதிராக சுமார் எட்டாயிரத்து 700 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.

ஊழல் குறித்து கூர்கான் போலீஸ் ஸ்டேஷனில் ‌பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யபட்டுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் இந்திய இயக்குனர் ஷாகி்ன்பத் கூறுகையில் கடந்த ஜனவரி மாதத்தில் இவர்கள் மீதான புகார் குறித்து நிர்வாக ரீதியாக கண்‌காணிக்கப்பட்டு வந்தது.கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நிறுவனத்திற்கு எதிராக கோடிக்கணக்கில் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நோக்கில் இவர்கள் இருவரும் இணைந்து நான்கு இடங்களில் போலியான ரகசிய குடோன்கள் அமைத்து செயல்பட்டு வந்துள்ளது உண்மை என கண்டறியப்பட்டவுடன் அவர்கள் பணி நீக்‌கம் செய்யப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

ரீபோக் நிறுவனம் மூலம் நாடுமுழுவதும் ரீடெயில் கடைமற்றும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 40 ஆயிரத்திற்கும் ‌ மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல்தொழில் நுட்பத்துறையில் ஈடுபட்டு வந்ததனியார் நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் சுமார் 14 ஆயிரம் ‌கோடிரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றது குறிப்பிடத்தக்‌கது .

No comments:

Post a Comment