Wednesday, May 23, 2012

டாக்டருக்கு 33 ஆண்டு சிறை

 Pakistan Jails Doctor Who Helped Cia Osama Bin Laden

 பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.க்கு காட்டிக் கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்த பாகிஸ்தான் மருத்துவருக்கு 33 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது.

இஸ்லாமாபாத் அருகே அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனின் ரத்த மாதிரியை எடுத்துக் கொடுத்து பின்லேடன்தான் என்று அமெரிக்காவிடம் உறுதி செய்து காட்டிக் கொடுத்தவர் டாக்டர் ஷகில் அப்ரிதி.

தங்களது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது என்பது பாகிஸ்தானின் வாதம். இதற்கு உடந்தையாக பாகிஸ்தான் மருத்துவர் இருந்தார் என்பதால் அவரை சிறையிலடைத்தது.

ஆனால் ஷகில் அப்ரிதியை விடுதலை செய்ய அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் நாட்டுக்கு எதிராக சதி செய்த வழக்கில் அப்ரிதிக்கு 33 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment