Monday, May 7, 2012

நடுரோட்டில் கணவனை அடித்து உதைத்த போலீஸ்! மனைவியின் கதறல் சத்தம் கேட்டு கூடிய மக்கள்!

புதுக்கோட்டை இடைத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் எங்கும் போலீஸ் சோதணை சாவடிகள் அமைத்து வாகன சோதணை செய்து வருகின்றனர். இன்று (07/05/2012) மதியம் 12 மணிக்கு திருக்கோகர்ணம் பகுதி வழியாக ஒரு கணவன், மனைவி காரில் சென்று கொண்டிருந்த போது அந்த காரை மறித்து சோதணை சாவடி போலீசார் சோதணை செய்தனர்.

அப்போது காரில் இருந்த கணவர் என்ன சோதணை என்று போலீசாரிடம் கேட்டுள்ளார். அதற்கு காரில் வெடிகுண்டு உள்ளதா என்று சோதணை செய்வதாக கூறியுள்ளனர். கணவன், மனைவி போகும் போது வெடிகுண்டு கொண்டு போவார்களா என்று கேள்வி கேட்டுள்ளார் கணவர். இதனால் கோபமான போலீசார் சிலர் அந்த கணவரை காருக்குள்ளிருந்து வெளியே இழுத்து ரோட்டில் போட்டு அடித்துவிட்டனர்.


இதை கண்ட மனைவி கதறியும் போலீசார் விட வில்லை. பெண்ணின் கதறல் சத்தம் கேட்டு அங்கு நின்ற பொதுமக்கள் கூடிவிட்டனர். அதன் பிறகு அடிப்பதை நிறுத்தியதுடன் அவரை அங்கேயே உக்கார வைத்துவிட்டனர். போலீசிடம் எதிர் கேள்வி கேட்டதால் இப்படி ஒருவரை மனிதாபிமானம் இன்றி அடித்திருப்பது அப்பகுதியில் பரபரப்பாக உள்ளது.

No comments:

Post a Comment