சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்த இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு மேற்கு வங்காள மாநில அரசும், பெங்கால் கிரிக்கெட் சங்கமும் இணைந்து பாராட்டு விழா நடத்துகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை நடக்கும் ஆட்டத்திற்கு முன்பாக இந்த விழா நடக்கிறது. விழாவில் மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு தெண்டுல்கருக்கு தங்கபேட்டும், பந்தும் வழங்கி கவுரவிக்கிறார்.
No comments:
Post a Comment