Thursday, May 24, 2012

ரஜினிகாந்த் அதிர்ச்சி - அதிருப்தி


புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி நடக்கிறது. இங்கு அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் நேரடியாக போட்டியிடுகிறது. இதர கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன.

இந்த நிலையில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ஸ்ரீதர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ரஜினி ரசிகர்களை திரட்டி ரஜினி மன்ற பெயரிட்ட பேனர், மற்றும் கொடியுடன் ஊர்வலமாக சென்று மனுவை தாக்கல் செய்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரஜினி அதிர்ச்சியடைந்துள்ளார். ரஜினி ரசிகர்கள் மன்றம் பெயரில் புதுக்கோட்டையில் போட்டியிட ஸ்ரீதர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதை ரஜினி ஏற்கவில்லை. வேட்பு மனுவை வாபஸ் பெறும்படி உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மனுவை அவர் வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுதாகர்,  ’’ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஸ்ரீதர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தகவலை பத்திரிகை மூலம் அறிந்தோம். நான் அவரிடம் ரஜினி பெயரையோ ரசிகர் மன்றத்தின் பெயரையோ மன்ற கொடியையோ பயன்படுத்தி தேர்தலில் நிற்ககூடாது என்று கூறி இருக்கிறேன்.

ரஜினி மன்ற உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நீற்கலாம். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வேலையும் செய்யலாம்.

ஆனால் அவர்கள் ரஜினி பெயரையோ, மன்ற கொடியையோ பயன்படுத்தக்கூடாது. ரசிகர்கள் அவர்களின் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்பதில்தான் ரஜினி அக்கறையுடன் இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில்,   தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீதர்,  ‘’வேட்பு மனு தாக்கல் செய்தது நான் எடுத்த முடிவு அல்ல மாவட் டத்தில் உள்ள அனைத்து ரஜினி ரசிகர்களும் கூடி எடுத்த முடிவு’’ என்கிறார்.

No comments:

Post a Comment