Monday, May 21, 2012

போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் கைது!

மகாராஷ்டிராவின் ஜல்காவோன் பகுதியில் 11 ஆயிரம் குறைந்த விலை வீடுகள் கட்டப்பட்டதில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக மகாராஷ்டிர போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் குலப்ராவ் தியோகர் கைது செய்யப்பட்டார்.

1995 2000 க்கு இடைப்பட்ட காலத்தில் ஜல்காவோன் மாநகராட்சி கவுன்சிலில் தியோகர் உறுப்பினராக இருந்தார். அவரை இந்த ஊழல் தொடர்பாக விசாரணைக்கு வரும்படி ஜில்லா பீத் போலீஸார் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி வந்த அவர் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment