தெலுங்கு சினிமாவின் மற்றொரு சூப்பர் ஸ்டாரான மோகன் பாபுவின் மகள் மஞ்சு லக்ஷ்மி பிரசன்னா தயாரிக்கும் இப்படத்தில் அவருடைய மகன் மனோஜ் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே 'என்னைத் தெரியுமா' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தில் மற்றொரு ஹீரோவாக பாலகிருஷ்ணா நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று (மே 21) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாலகிருஷ்ணா, தமிழில் பேசியது அனைவரையும் கவர்ந்தது.
'எங்கப்பா என்டிஆர் காரு அடிக்கடி என்னை வளர்த்தது தமிழ்நாடுதான். தமிழ்நாட்டு தண்ணியை குடிச்சிதான் நான் வளர்ந்தேன். அந்த தமிழ்நாட்டுக்கு என்ன பண்ண போறேன்னு? சொல்லிட்டு இருப்பாரு. இப்போ நாங்க தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கொடுத்துட்டோ ம். இந்தப் படத்தை எடுக்கும்போது மோகன் பாபு ரொம்ப செலவு ஆகும் என்றார். ஆனால், அவர்களோட பசங்க பரவாயில்லை ஒரு நல்ல படத்தை எடுத்தால் போதும் என்று இந்த படத்தை எடுத்தார்கள். பணத்திற்காக அவர்கள் இந்தப் படத்தை எடுக்கவில்லை. ஒரு சிறப்பான பெரிய படத்தை எடுக்க வேண்டும் எனபதற்காகவே இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்." என்றார்.
'வருவான் தலைவன்' நிகழ்காலத்தையும், வரலாற்று கதையையும் கலந்து சொல்லும் திரைக்கதை. இப்படத்திற்காக 'கந்தர்வ கோட்டை' என்ற ஒரு அரண்மனையை செட் போட்டிருக்கிறார்கள். 6 கோடி ரூபாய் செலவில் போடப்பட்டிருக்கும் இந்த அரண்மையின் பிரமாண்டத்திற்காகவே இப்படத்தை ஒரு முறை பார்த்து விடலாம்.
இப்படத்தை தயாரிக்கும் மஞ்சு லஷ்மி பிரசன்னா இதில் முக்கிய வேடம் ஒன்றிலும் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சுஹாசினி மணிரத்னம், பிரபா, சார்லி, இளவரசு, மனோ பாலா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சேகர் ராஜா இயக்குகிறார்.
No comments:
Post a Comment