Sunday, April 29, 2012

மைதானத்தில் புகைபிடித்ததால் ஷாருக்கானுக்கு சம்மன்


ஐ.பி.எல் 5 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் கடந்த 8ம் திகதி நடைபெற்றது.

இந்த போட்டியை நேரில் காண வந்திருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பிரபல பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் மைதானத்தில் புகை பிடித்துள்ளார்.

இதனையடுத்து அவர் மீது ஜெய்பூர் கிரிக்கெட் அகாடமி தலைவர் ஆனந்த் சிங் ரத்தோர் புகார் கொடுத்தார். இது தொடர்பான வழக்கு ஜெய்ப்பூர் கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ரத்தோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நெம் சிங் ரத்தோர் கூறுகையில், கடந்த 2000ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் மாநிலத்தில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஷாருக்கான் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த மைதானத்தில் புகைபிடித்துள்ளார்.


அந்த போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்களிலும் அவர் புகைபிடிக்கும் காட்சியும் வந்தது என்று கூறினார்.

இதனை விசாரித்த நீதிவான் ஷில்பா சமீர், நடிகர் ஷாருக்கானுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அந்த சம்மனில் மே 26ம் திகதிக்குள் ஷாருக்கான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஷாருக்கான் ஏற்கனவே இது போல புகை பிடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment