அவருக்கு புனேவில் உள்ள சம்ரிதா ஜிவான் பவுண்டேஷன் சார்பில் நவி சங்வி மைதானத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் அவருக்கு ஒர் கார் பரிசளிக்கப்பட்டது. விழாவுக்கு வந்திருந்த அவரை பார்க்க ஏராளமானோர் திரண்டிருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்கள் மத்தியில் அவர் பேசிய போது:
நான் குணமடைய எனக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்தீர்கள். தொடந்து எனக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு தற்போது எனது உடலில் சக்தி இல்லை. நான் விரைவில் இந்தியாவுக்காக விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் தனது அணியான புனே வாரியர்ஸ் அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் விளையாடிய போட்டியை காண வந்திருந்தார்.
No comments:
Post a Comment